Sunday 8 July 2012

திரு. வே. ஆனைமுத்து அய்யா அவர்களுக்கு பாராட்டு விழா




 

கல்வி வள்ளல் கந்தசாமி கண்டர் பரமத்தி வேலூரில் 1930களில் தொடங்கிய பள்ளி, அக்காலத்தில் ஏராளமானோருக்கு கல்வி பயிலும் வாய்ப்பை வழங்கியது. அந்த கல்வி கூடத்தில் படித்தவர்களில் ஒருவர் பேரறிஞர் வே. ஆனைமுத்து அய்யா அவர்கள். கந்தசாமி கண்டர் கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் திரு. வே. ஆனைமுத்து அய்யா அவர்களுக்கு 10 . 02  . 2006  அன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. கந்தசாமி கண்டர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சி சன் நியூஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பானது.